E- PASS முறையால் வேதனை - வாழ்வாதாரம் பறிப்பு - கண்ணீரில் வணிகர்கள்!
Aug 7, 2026, 12:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

E- PASS முறையால் வேதனை – வாழ்வாதாரம் பறிப்பு – கண்ணீரில் வணிகர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் நடைமுறைப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள இ பாஸ் நடைமுறை குறித்தும், அதனால் வணிகர்கள் சந்திக்கும் பாதிப்பு குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் தமிழகத்தின் தவிர்க்கச் சுற்றுலாத் தளமாகவும் பொதுமக்கள் விரும்பும் தளமாகவும் விளங்கி வருகிறது. கோடைக் காலம் வந்து விட்டால் தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் ஊட்டியை நோக்கிப் படையெடுத்து வருவது வழக்கமாக இருக்கிறது.

கோடை வெயிலைச் சமாளிக்க நீலகிரிக்கு ஒரே நேரத்தில் படையெடுக்கும் பொதுமக்களால் கடும் போக்குவரத்து நெரிசலோடு, நீலகிரியின் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிப்படைவதாகப் புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இ – பாஸ் நடைமுறைக்கு உத்தரவிட்டதோடு, வார நாட்களில் நாள்தோறும் ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளோ, ஐடி நிறுவனங்களோ இல்லாத நிலையில் சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் தங்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக வணிகர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

சுற்றுலா வாகனங்களுக்கு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் தங்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என  சுற்றுலாத்துறையை மட்டுமே நம்பியிருக்கும் வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை மற்றும் மலைத் தோட்ட காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையில், சுற்றுலாப்பயணிகளின் வருகை குறையும் பட்சத்தில் மேலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகச் சாலையோர வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சாலையோர வியாபாரிகள், வணிகர்கள், காட்டேஜ் உரிமையாளர்கள் எனச் சுற்றுலாத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும்  தங்களின்  வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்து மீண்டும் பழைய நடைமுறையே தொடர்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு நீலகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த வணிகர் சங்கமும்  கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: ootyநீலகிரிNilgiris E-PASS system causes suffering - livelihoods are being taken away - traders in tears!
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அமைச்சர்கள் மீது பாஜக சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் : ஹெச்.ராஜா

Next Post

தமிழகத்தின் அத்திப்பட்டி வெள்ளை கவி கிராமம் : அடிப்படை வசதிகளுக்கு தவமாய் தவமிருக்கும் மக்கள்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies