அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!
Nov 8, 2025, 08:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடியில் வாகன நிறுத்துமிடம், முறையான வடிகால் அமைப்பு, சிசிடிவி கேமிராக்கள் என எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பால் அங்குத் தங்கியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அவசரகதியில் கட்டி முடித்துத் திறக்கப்பட்ட குடியிருப்பின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை வியாசர்பாடியில் உள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது இந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு. 13 தளங்களைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தமாக 468 வீடுகள் அமைந்துள்ளன. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுகவால் நான்கு  ஆண்டுகள் கழித்துத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பில்  எந்தவித அடிப்படைவசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

60 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் மின்தூக்கிகள் முறையாக வேலை செய்யாத காரணத்தினால் 13வது மாடியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், கோடிக் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிசிடிவி கேமிரா கூட பொருத்தப்படாமல் இருப்பது அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது,

போதுமான வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு உபகரணங்கள், முறையான வடிகால் அமைப்பு, குடிநீர் வசதி எனப் பொதுமக்கள் வசிக்கத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவசரகதியில் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பு பொதுமக்கள் வாழத்தகுதியற்ற குடியிருப்பாக மாறி வருகிறது.

சமூக நீதி, சமூக முன்னேற்றம், இது எல்லோருக்குமான அரசு என தங்களை விளம்பரப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, பொதுமக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலுத்த வேண்டும் என்பதே குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: tamil janam tvApartment opened in a hurry without basic amenities: Field information!தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்சென்னை வியாசர்பாடி
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்

Next Post

அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

Related News

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே செல்போன் டார்ச் அடித்து அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!

கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

திரைப்பட புகழை நம்பி பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கியதாக சிலர் நினைக்கிறார்கள் – கே.பி.முனுசாமி

வந்தே மாதரம் தாயை புகழ்ந்து பாடும் பாடல் – ஹெச்.ராஜா

4 வந்தே பாரத் ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

5 நாட்கள் பயணமாக இன்று ஆப்பிரிக்கா செல்கிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றுமா இந்தியா? – ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

விற்பனைக்கு வரும் நடப்பு சாம்பியன் RCB? : SEBI அறிக்கையில் வெளியான தகவலால் அதிர்ச்சி – சிறப்பு தொகுப்பு!

தருமபுரம் ஆதீனம் மணிவிழா – யானை, குதிரை, பசு உள்ளிட்ட விலங்குகளுக்கு சிறப்பு பூஜை!

ஜவுளி பூங்காவிற்கு பதில் சாயப்பட்டறை ஆலையா? : கொந்தளிக்கும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

கடற்படையில் INS இஷாக் ஆய்வுக் கப்பல் இணைப்பு!

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவை முந்தும் இந்தியா – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோயில்களில் அன்னதானம் – நிர்வாக அதிகாரி அறிவிப்பு!

செங்கோட்டையன் விவகாரத்தில் திமுக பின்னணியில் உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளது – நயினார் நாகேந்திரன்

வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை கண்டு திமுக அஞ்சுவது ஏன்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சிபிஐ முன் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies