அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை வியாசர்பாடியில் வாகன நிறுத்துமிடம், முறையான வடிகால் அமைப்பு, சிசிடிவி கேமிராக்கள் என எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத அடுக்குமாடிக் குடியிருப்பால் அங்குத் தங்கியிருக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அவசரகதியில் கட்டி முடித்துத் திறக்கப்பட்ட குடியிருப்பின் தற்போதைய நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

சென்னை வியாசர்பாடியில் உள்ள முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு நேர் எதிரே அமைந்திருக்கிறது இந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு. 13 தளங்களைக் கொண்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மொத்தமாக 468 வீடுகள் அமைந்துள்ளன. 2018ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுகவால் நான்கு  ஆண்டுகள் கழித்துத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பில்  எந்தவித அடிப்படைவசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

60 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் மின்தூக்கிகள் முறையாக வேலை செய்யாத காரணத்தினால் 13வது மாடியில் வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சென்னையில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில், கோடிக் கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு சிசிடிவி கேமிரா கூட பொருத்தப்படாமல் இருப்பது அவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது,

போதுமான வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு உபகரணங்கள், முறையான வடிகால் அமைப்பு, குடிநீர் வசதி எனப் பொதுமக்கள் வசிக்கத் தேவையான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவசரகதியில் கட்டிமுடிக்கப்பட்டுத் திறக்கப்பட்ட இந்த குடியிருப்பு பொதுமக்கள் வாழத்தகுதியற்ற குடியிருப்பாக மாறி வருகிறது.

சமூக நீதி, சமூக முன்னேற்றம், இது எல்லோருக்குமான அரசு என தங்களை விளம்பரப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, பொதுமக்களின் அடிப்படை, அத்தியாவசியத் தேவைகளுக்குச் செலுத்த வேண்டும் என்பதே குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags: tamil janam tvApartment opened in a hurry without basic amenities: Field information!தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்சென்னை வியாசர்பாடி
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்

Next Post

அமலாக்கத்துறை நடத்திய சோதனைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணை ஏப்.8-க்கு ஒத்திவைப்பு!

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies