25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் ரேணுகா சுட்டுக்கொல்லப்பட்டார்.
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் அமைந்துள்ள தண்டே வாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் பெண் நக்சல் தலைவர் ரேணுகா சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 25 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.