தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

90 வயது நிரம்பிய நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் வரதராஜுலு – ஆதிலட்சுமி கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். சேலம் லீ பஜாரில் கடை நடத்திவரும் தம்பதி குறித்தும் அவர் கடையில் விற்பனை செய்யப்படும் பஜ்ஜி, போண்டா குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் லீ பஜார் பகுதியைச் சேர்ந்த 90 வயது நிரம்பிய தம்பதியர் தான் இந்த வரதராஜுலுவும் ஆதிலட்சுமியும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீ பஜார் பகுதியில் வடை, பஜ்ஜி, போண்டா கடையைத் தொடங்கிய போது இருந்த ஆர்வமும் உழைப்பும் தற்போது தொடர்கிறது.

சேலம் மாவட்டத்தில் வர்த்தக மையமான லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தான் இந்த தம்பதி வைத்திருக்கும் கடையின் பிரதான வாடிக்கையாளர்கள்.

தரமான மாவு மற்றும் எண்ணெய்யின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் இந்த வடை, போண்டாவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும், அதன் தரத்தையோ, அளவையோ சிறிதளவும் குறைக்காததே பொதுமக்கள் இந்த தம்பதியினரின் கடையைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் சூழலையும் உருவாக்கியது. 25 பைசாவில் தொடங்கிய வடை, போண்டா, பஜ்ஜி தற்போது ஒரு ரூபாயாக உயர்ந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு தற்போது வரை குறையவில்லை.

வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினரின் இரு மகன்களும் அவரவர் புதிய தொழிலைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் மகன்களை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக 90 வயது கடந்த நிலையிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்முகத்துடன் வரவேற்பதையும், தன்மையுடன் பேசுவதையுமே அடையாளமாகக் கொண்டிருக்கும் இந்த தம்பதியினரால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90 வயது நிரம்பிய நிலையிலும் சுயமாக உழைத்து வாழும் இந்த வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினர் தன்னம்பிக்கை உணர்வுக்கும் விடா முயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றனர்.

Tags: சேலம்Unwavering hard work despite advancing age: A 90-year-old couple who set an example!முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி
ShareTweetSendShare
Previous Post

முதல் செங்குத்து தூக்குப் பாலம் : நிறைவேறுகிறது கோடான கோடி மக்களின் கனவு!

Next Post

பேரிடர் ராஜதந்திரம் : புவி சார் அரசியலில் – இந்தியா அபார ஆட்டம்!

Related News

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies