தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!
Aug 6, 2026, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தள்ளாத வயதிலும் தளராத உழைப்பு : முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி!

Murugesan M by Murugesan M
Apr 7, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

90 வயது நிரம்பிய நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கும் வரதராஜுலு – ஆதிலட்சுமி கடின உழைப்பு மற்றும் விடா முயற்சிக்கு அடையாளமாகத் திகழ்கின்றனர். சேலம் லீ பஜாரில் கடை நடத்திவரும் தம்பதி குறித்தும் அவர் கடையில் விற்பனை செய்யப்படும் பஜ்ஜி, போண்டா குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் லீ பஜார் பகுதியைச் சேர்ந்த 90 வயது நிரம்பிய தம்பதியர் தான் இந்த வரதராஜுலுவும் ஆதிலட்சுமியும். 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீ பஜார் பகுதியில் வடை, பஜ்ஜி, போண்டா கடையைத் தொடங்கிய போது இருந்த ஆர்வமும் உழைப்பும் தற்போது தொடர்கிறது.

சேலம் மாவட்டத்தில் வர்த்தக மையமான லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை, சத்திரம் பகுதிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மூட்டை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் தான் இந்த தம்பதி வைத்திருக்கும் கடையின் பிரதான வாடிக்கையாளர்கள்.

தரமான மாவு மற்றும் எண்ணெய்யின் மூலம் தயாரித்து விற்பனை செய்யப்படும் இந்த வடை, போண்டாவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்த போதிலும், அதன் தரத்தையோ, அளவையோ சிறிதளவும் குறைக்காததே பொதுமக்கள் இந்த தம்பதியினரின் கடையைத் தேடி வந்து வாங்கிச் செல்லும் சூழலையும் உருவாக்கியது. 25 பைசாவில் தொடங்கிய வடை, போண்டா, பஜ்ஜி தற்போது ஒரு ரூபாயாக உயர்ந்திருந்தாலும் அதற்கான வரவேற்பு தற்போது வரை குறையவில்லை.

வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினரின் இரு மகன்களும் அவரவர் புதிய தொழிலைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் மகன்களை நம்பி இருக்கக் கூடாது என்பதற்காக 90 வயது கடந்த நிலையிலும் அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்முகத்துடன் வரவேற்பதையும், தன்மையுடன் பேசுவதையுமே அடையாளமாகக் கொண்டிருக்கும் இந்த தம்பதியினரால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90 வயது நிரம்பிய நிலையிலும் சுயமாக உழைத்து வாழும் இந்த வரதராஜுலு – ஆதிலட்சுமி தம்பதியினர் தன்னம்பிக்கை உணர்வுக்கும் விடா முயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வருகின்றனர்.

Tags: சேலம்Unwavering hard work despite advancing age: A 90-year-old couple who set an example!முன்மாதிரியாகத் திகழும் 90 வயது தம்பதி
Share
Tweet
SendShare
Previous Post

முதல் செங்குத்து தூக்குப் பாலம் : நிறைவேறுகிறது கோடான கோடி மக்களின் கனவு!

Next Post

பேரிடர் ராஜதந்திரம் : புவி சார் அரசியலில் – இந்தியா அபார ஆட்டம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies