முடங்கும் தொழில் நகரம் : திமுக ஆட்சியில் தொழில்முனைவோர் விரக்தி!
Jun 17, 2025, 04:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முடங்கும் தொழில் நகரம் : திமுக ஆட்சியில் தொழில்முனைவோர் விரக்தி!

Web Desk by Web Desk
Apr 16, 2025, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளை நெருங்கும் வேளையிலும் தொழில்முனைவோர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஆட்சிக்கு முன்பாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும், ஆட்சிக்கு வந்தபின் அதனை நிறைவேற்ற மறுப்பதையுமே வாடிக்கையாக வைத்திருக்கும் திமுக அரசுக்குத் தொழில்முனைவோர் விடுத்திருக்கும் கோரிக்கைகளை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

புதிய தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன், சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சலுகை விலையில் மின் கட்டணம், புதிய காற்றாலை அமைக்க அனுமதி, விசைத்தறி தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை, டெண்டர் விலையில் 10 சதவீத சலுகை, சிறு குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணக் குழு.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் சில தான் இவை. ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையில் கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசிலவற்றைக் கூட நிறைவேற்றவில்லை என திமுக அரசு மீது புகார் எழுந்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாகப் பல தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில், அவற்றில்  பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியது.

தொற்று பரவல் குறையத் தொடங்கி படிப்படியாக மீண்டு வந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஒரேயடியாக முடக்கும் வகையில் மின் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியது திமுக அரசு. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் இடமாகத் திகழும் கோவையில் தொழில் முனைவோர்களின் நிலை மிகவும் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பம்ப் செட் உற்பத்தி தொழில், உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற தொழிலாக இருக்கிறது. அத்தகைய சிறப்புமிக்க தொழிலும் மின் கட்டணம் மற்றும் நிலைக்கட்டண உயர்வால் முடங்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி நிறைவடைய ஓராண்டே மீதமிருக்கும் நிலையில், கோவை மாநகர தொழில் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

வெளிநாடுகளுக்குப் பயணம், தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு எனக் கவனம் செலுத்தும் தமிழக அரசு, சொந்த மாநிலத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழில்முனைவோர் மத்தியிலிருந்து எழுந்துள்ளது.

Tags: திமுக ஆட்சிParalyzing industrial city: Entrepreneurs frustrated with DMK ruleமுடங்கும் தொழில் நகரம்தொழில் நகரம்
ShareTweetSendShare
Previous Post

டெல்லி : 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா!

Next Post

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

தொடர் மழை – 130 அடியை தாண்டிய காரையார் அணை நீர்மட்டம்!

இஸ்ரேல்-ஈரான் போர் : பின்னணியில் அமெரிக்கா?

கள்ளக்குறிச்சியில் தடையை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல் யாத்திரை!

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

சிறுவனை கடத்தியது தொடர்பான வழக்கு – பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான் : மேற்கு ஆசியாவின் எதிர்காலம் என்ன?

சிந்து நதி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் திட்டம் – மத்திய அரசு ஆலோசனை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கொட்டும் மழையில் தரிசனம் செய்த பக்தர்கள்!

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாத திமுக மக்களை குழப்ப முயற்சிக்கிறது – அண்ணாமலை

தஞ்சையில் முதல்வருக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது- அண்ணாமலை கண்டனம்!

வாணியம்பாடி அருகே மணல் கடத்தலை தடுத்த குடும்பத்தினரை மருத்துவமனை வளாகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

பாமக-வில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் திமுக-வின் சூழ்ச்சி எடுபடாது – அன்புமணி ராமதாஸ்

மக்கள் தொகை கணக்கெடுப்பு – அரசிதழில் வெளியீடு!

வாழப்பாடி அருகே தனியார் பள்ளி பங்குதாரர்கள் இடையே மோதல் – மாணவர்களின் கல்வி கேள்விக்குறி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies