வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
Jan 14, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டத் திருத்தத்தின் சில சரத்துகளைப் பார்த்து மட்டும் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது எனவும், ஏற்கனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், புதிய சட்டப்படி எந்த வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து புதிய சட்டப்படி நிலங்களை வகைப்படுத்த மாட்டோம் எனவும், வக்ஃபு உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் 5 அல்லது 6 மனுக்களை விரிவாக விசாரித்து உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் வக்ஃபு வாரியம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்120 petitions filed against Waqf Act: Response must be given within 7 days - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

Next Post

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? – ஜெக்தீப் தன்கர் கேள்வி!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies