வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்
Jul 26, 2025, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Apr 17, 2025, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சட்டத் திருத்தத்தின் சில சரத்துகளைப் பார்த்து மட்டும் உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

எவரும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான விரிவான எழுத்துப்பூர்வ விளக்கத்தை ஒரு வாரத்தில் தாக்கல் செய்வதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில் முழுமையாக எந்த உத்தரவையும் இப்போது பிறப்பிக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், புதிய சட்டப்படி எந்த உறுப்பினர் நியமனமும் இருக்கக்கூடாது எனவும், ஏற்கனவே வக்ஃபு என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், புதிய சட்டப்படி எந்த வகைப்படுத்தலும் இருக்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். தொடர்ந்து புதிய சட்டப்படி நிலங்களை வகைப்படுத்த மாட்டோம் எனவும், வக்ஃபு உறுப்பினர்களை நியமிக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 120 மனுக்கள் வரை பெறப்பட்டுள்ள நிலையில், அனைத்து மனுக்களையும் விசாரிப்பது கடினம் எனத் தெரிவித்த தலைமை நீதிபதி, முக்கிய சட்ட கேள்விகளை எழுப்பும் 5 அல்லது 6 மனுக்களை விரிவாக விசாரித்து உத்தரவைப் பிறப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுக்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் வக்ஃபு வாரியம் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்120 petitions filed against Waqf Act: Response must be given within 7 days - Supreme Court
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் துன்புறுத்தப்படவில்லை – உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்!

Next Post

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? – ஜெக்தீப் தன்கர் கேள்வி!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies