பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமனா நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றும், இஸ்லாமியர்களா, இந்துவா என கேட்டு மக்களை சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறினார்.
காஷ்மீரில் 370 என்ற சட்டப்பிரிவை எடுத்த பிறகும் அனைத்தும் கட்டுக்குள் உள்ள நிலையில் துர்திஷ்ட்டவசமாக தாக்குதல் நடந்துள்ளதாக தெரிவித்தார் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அரசு இயந்திரங்கள் விரைவில் பதில் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.