ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் 'மா' விவசாயிகள் வேதனை!
Jan 14, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மாம்பழத்தின்  சீசன் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மாம்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், லிங்கன் வாடி, செந்துறை, கோபால் பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதான விவசாயமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கல்லாமை, காசா, மல்கோவா,  இமாம் பசாந்த், நீளம், செந்தூரம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகைகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால், மாம்பழங்களின் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எண்ணியிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்த விளைச்சலால் இப்பகுதி விவசாயிகளுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பிற மாநில விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் வேதனையில் தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டுமென்பதே மா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: tamil janam tvமாம்பழம்Traders not interested: Mango farmers suffer due to price dropமா' விவசாயிகள் வேதனைவியாபாரிகள்
ShareTweetSendShare
Previous Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Next Post

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More

அண்மைச் செய்திகள்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies