ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் 'மா' விவசாயிகள் வேதனை!
Oct 5, 2025, 12:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மாம்பழத்தின்  சீசன் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மாம்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், லிங்கன் வாடி, செந்துறை, கோபால் பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதான விவசாயமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கல்லாமை, காசா, மல்கோவா,  இமாம் பசாந்த், நீளம், செந்தூரம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகைகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால், மாம்பழங்களின் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எண்ணியிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்த விளைச்சலால் இப்பகுதி விவசாயிகளுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பிற மாநில விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் வேதனையில் தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டுமென்பதே மா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: tamil janam tvமாம்பழம்Traders not interested: Mango farmers suffer due to price dropமா' விவசாயிகள் வேதனைவியாபாரிகள்
ShareTweetSendShare
Previous Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Next Post

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies