ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் 'மா' விவசாயிகள் வேதனை!
Aug 7, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மாம்பழத்தின்  சீசன் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மாம்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், லிங்கன் வாடி, செந்துறை, கோபால் பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதான விவசாயமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கல்லாமை, காசா, மல்கோவா,  இமாம் பசாந்த், நீளம், செந்தூரம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகைகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால், மாம்பழங்களின் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எண்ணியிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்த விளைச்சலால் இப்பகுதி விவசாயிகளுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பிற மாநில விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் வேதனையில் தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டுமென்பதே மா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: வியாபாரிகள்tamil janam tvமாம்பழம்Traders not interested: Mango farmers suffer due to price dropமா' விவசாயிகள் வேதனை
Share
Tweet
SendShare
Previous Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Next Post

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies