ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் 'மா' விவசாயிகள் வேதனை!
Jun 23, 2026, 07:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் பிரதான தொழிலாக மாம்பழ விவசாயமே உள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால் விலை வீழ்ச்சியடைந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

முக்கனிகளில் முதன்மையானதும், பழங்களின் அரசன் என்றும் போற்றப்படும் மாம்பழத்தை யாருக்குத்தான் பிடிக்காது. அப்படிப்பட்ட மாம்பழத்தின்  சீசன் தற்போது களைக்கட்டத் தொடங்கி உள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும் மாம்பழம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகப் பயிரிடப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தின் நத்தம், லிங்கன் வாடி, செந்துறை, கோபால் பட்டி, சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் பிரதான விவசாயமாகத் திகழ்ந்து வருகிறது. இப்பகுதியில் கல்லாமை, காசா, மல்கோவா,  இமாம் பசாந்த், நீளம், செந்தூரம், பங்கனப்பள்ளி உள்ளிட்ட மா வகைகளை விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக இருந்ததால், மாம்பழங்களின் விலை அதிகரித்து நல்ல லாபம் கிடைக்கும் என்று விவசாயிகள் எண்ணியிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் அதிகரித்த விளைச்சலால் இப்பகுதி விவசாயிகளுக்குப் பேரிடி ஏற்பட்டுள்ளது. மாம்பழங்களைக் கொள்முதல் செய்ய வெளிமாநில வியாபாரிகள் வருகை தராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் பிற மாநில விளைச்சலால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

மாம்பழங்களின் விலை வீழ்ச்சியால் வேதனையில் தவிக்கும் தங்களுக்கு அரசு உதவ முன்வர வேண்டுமென்பதே மா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: வியாபாரிகள்tamil janam tvமாம்பழம்Traders not interested: Mango farmers suffer due to price dropமா' விவசாயிகள் வேதனை
ShareTweetSendShare
Previous Post

ஒரு வருடத்திற்கு இலவசப் பயணமா? : ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு GOOD NEWS!

Next Post

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies