முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
Aug 7, 2026, 09:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் முருகேசன், கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ம் தேதி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகி குடும்பத்தார் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, முருகேசன், கண்ணகியை வண்ணாங்குடிக்காடு மயானத்திற்குக் கடத்திச் சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்து எரித்தனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் உட்பட 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பல ஆண்டுகளாகக் கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருது பாண்டி, கந்தவேலு, ஜோதி, மணி உட்பட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு மரண தண்டனையும், உடந்தையாகச் செயல்பட்ட மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதேபோல, வழக்கைச் சரியாக விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், மருது பாண்டியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதோடு 12 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இதில், கண்ணகியின் உறவினரான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதான்சு துலியா, குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்ஆயுள் தண்டனைMurugesan - Kannagi honor killing: Supreme Court confirms life imprisonmentமுருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை
Share
Tweet
SendShare
Previous Post

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Next Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Related News

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies