முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!
Jun 23, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை : ஆயுள் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன் நடந்த முருகேசன் – கண்ணகி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகேயுள்ள குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் முருகேசன், கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ம் தேதி மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகி குடும்பத்தார் கடந்த 2003-ம் ஆண்டு ஜூன் 8-ம் தேதி, முருகேசன், கண்ணகியை வண்ணாங்குடிக்காடு மயானத்திற்குக் கடத்திச் சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றிக் கொலை செய்து எரித்தனர்.

கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த நிலையில், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ் மாறன் உட்பட 15 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

பின்னர் பல ஆண்டுகளாகக் கடலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, சகோதரர் மருது பாண்டி, கந்தவேலு, ஜோதி, மணி உட்பட 15 பேரில் 13 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

மேலும், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு மரண தண்டனையும், உடந்தையாகச் செயல்பட்ட மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதேபோல, வழக்கைச் சரியாக விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தண்டனை பெற்றவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், மருது பாண்டியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டதோடு 12 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இதில், கண்ணகியின் உறவினரான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதான்சு துலியா, குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

Tags: உச்சநீதிமன்றம்ஆயுள் தண்டனைMurugesan - Kannagi honor killing: Supreme Court confirms life imprisonmentமுருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை
ShareTweetSendShare
Previous Post

ஆர்வம் காட்டாத வியாபாரிகள் : விலை வீழ்ச்சியால் ‘மா’ விவசாயிகள் வேதனை!

Next Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies