ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Jan 14, 2026, 06:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 01:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக, புதிய சங்கத்தைத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி கடிதம் அனுப்பியது.

அதனைத் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் ஃபெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுநர்களால், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட்டதாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி ஃபெப்சி அமைப்பு பணியாற்ற மறுப்பது சட்டவிரோதமானது எனவும், இதன் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி முதல் படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறுமின்றி முடித்துக் கொடுக்கும்படி ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும், படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளில் தலையிட ஃபெப்சி அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு வரும் மே 7-ம் தேதிக்குள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுHigh Court orders FEPC to respondஃபெப்சி
ShareTweetSendShare
Previous Post

ஜப்பான் : வெள்ளை நிற திமிங்கலம் – வீடியோ வைரல்!

Next Post

அமெரிக்கா : கார் மோதி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies