ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
Aug 7, 2026, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஃபெப்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 01:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் ஃபெப்சிக்கு எதிராக, புதிய சங்கத்தைத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் துவக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், ஃபெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும் எனத் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஃபெப்சி கடிதம் அனுப்பியது.

அதனைத் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் ஃபெப்சி அமைப்புக்கு எதிராக சில தொழில்நுட்ப வல்லுநர்களால், தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் புதிய சங்கம் தொடங்கப்பட்டதாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தங்களை மீறி ஃபெப்சி அமைப்பு பணியாற்ற மறுப்பது சட்டவிரோதமானது எனவும், இதன் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி முதல் படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக முடங்கி, மிகப்பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒப்பந்தப்படி படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளை எந்தவித இடையூறுமின்றி முடித்துக் கொடுக்கும்படி ஃபெப்சி அமைப்புக்கு உத்தரவிட வேண்டும் எனவும், படப்பிடிப்பு மற்றும் படத்தயாரிப்பு பணிகளில் தலையிட ஃபெப்சி அமைப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு வரும் மே 7-ம் தேதிக்குள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி ஃபெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags: உயர்நீதிமன்றம் உத்தரவுHigh Court orders FEPC to respondஃபெப்சி
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பான் : வெள்ளை நிற திமிங்கலம் – வீடியோ வைரல்!

Next Post

அமெரிக்கா : கார் மோதி மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies