தமிழக அமைச்சரவையில், மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் இருந்த கனிமவளத்துறை ரகுபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமைச்சர் துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரகுபதிக்கு கனிமவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துறைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன், நீர்வளத்துறையுடன் சேர்த்து சட்டத்துறையையும் சேர்த்து கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.