ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட், ஜூன் 3ஆம் தேதி இறுதிப்போட்டியுடன் நிறைவடைகிறது. டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் குவாலிபையர் மே 29ஆம் தேதியும், எலிமினேட்டர் மே 30ஆம் தேதியும், 2ஆம் குவாலிபையர் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.