ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் வரையறுத்ததற்காகவும், பாகிஸ்தானின் கொடூரமான பயங்கரவாதச் செயல்களுக்காக அதன் கற்பனைக்கு எட்டாத வகையில், அதன் மோசமான அரசையும் அதன் அணு ஆயுத அச்சுறுத்தல் கேடயத்தையும் உடைத்தெறிந்த வகையில், அதை வெளிப்படையாகத் தண்டிப்பதற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய போர் யுகத்தில் மிக உயர்ந்த ராணுவத் திறன்களை திறம்பட நிரூபித்ததற்காக ஆயுதப் படைகளுக்குப் பாராட்டுகள். இதுவே புதிய பாரதம் மற்றும் அதன் புதிய இயல்பு! பாரத மாதா வாழ்க என அதில் கூறப்பட்டுள்ளது.