பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!
Oct 9, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு துணைநிற்கும் துருக்கி : துருக்கியை புறக்கணிக்கும் இந்திய மக்கள்!

Web Desk by Web Desk
May 19, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் துருக்கி நாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியர்கள் துருக்கியைப் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், நல்ல காலத்திலும் கெட்ட காலத்திலும் பாகிஸ்தானுக்குத் துருக்கி  துணை நிற்கும் என்று அதிபர் எர்டோகன் உறுதியளித்தார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா கூறிய உடனேயே, துருக்கி விமானப் படையின் சி-130 விமானம் பகிஷனில் தரை இறங்கியது. தொடர்ந்து,துருக்கியின் போர்க்கப்பல் கராச்சி துறைமுகத்தில் நிலைநிறுத்தப் பட்டது. இது நல்லெண்ணத்தின் அடிப்படையில் என்று துருக்கி கூறியது.

ஆப்ரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் துருக்கி அதிபர் எர்டோகன்  தனது Insta பக்கத்தில்  பதிவிட்டிருந்தார்.மேலும் பஹல்காம் தாக்குதலுக்குச் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற பாகிஸ்தானின் வேண்டுகோளை  எர்டோகன் ஆதரித்திருந்தார்.

இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானை ஆதரிக்கப் பிற வளைகுடா நாடுகள் எல்லாம் விலகி நின்ற போதும்,  ஆப்ரேஷன் சிந்தூரைக் கண்டித்த முதல் நாடு துருக்கி தான். அதிக அளவில் துருக்கியில் உற்பத்தி செய்த (SONGAR) சோங்கர் ட்ரோன்களை பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

ஆயுதங்களைக் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் தனது வீரர்களையும் இந்தியாவுக்கு எதிராகப் போரிட அனுப்பி வைத்தது துருக்கி. ஆபரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக இரண்டு துருக்கிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தன. 2023 ஆம் ஆண்டு, துருக்கி மற்றும் சிரியாவை மிகப்பெரிய நிலநடுக்கம் தாக்கிய இக்கட்டான நேரத்தில், ஆப்ரேஷன் தோஸ்த் என்ற பெயரில் இந்திய அரசு துருக்கிக்கு நிவாரண மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது.

ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போரில், துருக்கி பாகிஸ்தான் பக்கமே நிற்கிறது. இதனால்  இந்தியாவுக்குத் துரோகம் செய்ததாகக் கோபமடைந்த இந்தியர்கள் துருக்கியை நிராகரித்துள்ளனர். BoycottTurkey என்ற ஹேஷ்டேக் கடந்த சில நாட்களாகப் பிரபலமாகி வருகிறது.

துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள்களை இந்திய வணிகர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால்,1,500 கோடி ரூபாய்க்கும் மேல் துருக்கிக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த சலவைக் கல் இறக்குமதியில் 70 சதவீதத்துக்கும் அதிகமாகத் துருக்கியிலிருந்து வருகிறது.  இந்நிலையில், துருக்கியிலிருந்து சலவைக் கற்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று  இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

துருக்கி சுற்றுலா முன்பதிவு ரத்து 250 சதவீதம் அதிகரித்துள்ளது.  துருக்கி பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தத்தை டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நிறுத்தி உள்ளது. இந்தியாவில் புறக்கணிக்கப் படுவதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தான் துருக்கி உறவு வலுவான சகோதரத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ளார்.

துருக்கி காட்டிய வலுவான ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  துருக்கியுடனான  உறவு ஒவ்வொரு புதிய சவாலிலும் வலுவடைகிறது என்று தெரிவித்துள்ளார். எர்டோகன் துருக்கியின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, பாகிஸ்தானுடனான இராணுவ உறவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவுடனான உறவில் பெரிய இடைவெளி உருவாகி வருகிறது.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் துருக்கியும் பாகிஸ்தானும் இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்றன என்று கூறப்பப்பட்டாலும், துருக்கி கைகளில் இந்தியர்களின் இரத்தக்கறை படிந்துள்ளது என்பதே உண்மை.

Tags: pakistan warturkeyTurkey supports Pakistan: Indian people boycott Turkey
ShareTweetSendShare
Previous Post

ஆப்ரேஷன் சிந்தூர் : பாகிஸ்தானில் கதிர்வீச்சு கசிவு இல்லை : IAEA மறுப்பு!

Next Post

ராணுவத்தின் அங்கம் ஜிகாத் : ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் – அதிர்ச்சியில் உலக நாடுகள்!

Related News

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies