இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் சபலென்கா தோல்வியடைந்தார்.
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இத்தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா, சீன வீராங்கனை கிவ்வென் உடன் மோதினார்.
இதில் 6 க்கு 4, 6 க்கு 3 என்ற நேர் செட் கணக்கில் கிவ்வென் வெற்றி பெற்றார். அதிர்ச்சி தோல்வி கண்ட சபலென்கா காலிறுதி சுற்றோடு வெளியேறினார்.