போர் பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப் – டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் தரம்சாலாவில் நடைபெற்று கொண்டிருந்தது.
10 புள்ளி 1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில், மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இன்று தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.