இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹன் வெல்பலை சந்தித்து பேசினார்.
அப்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்தது.
இதுதொடர்பாக பேசிய ஜோஹன் வெல்பல், பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு என கூறினார். இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் அமலில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.