பஹ்ரைன் சென்றடைந்த பைஜயந்த் பாண்டா தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், அந்நாட்டு தலைவர்களை சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.
ஆப்ரேஷன் சிந்தூரின் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க 7 குழுக்களை மத்திய அரசு நியமித்தது. இந்த நிலையில், பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவினர் பஹ்ரைன் சென்றடைந்தனர். இதையடுத்து, பஹ்ரைனின் தலைநகரமான மனாமாவில் பிரதிநிதிகள் குழுவின் முதல் துணை சபாநாயகர் அப்துல் நபி சல்மாவை சந்தித்த குழுவினர், அவரிடம் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்தனர்.
இதேபோல, கத்தார் சென்றடைந்த தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே தலைமையிலான எம்.பி.க்கள் குழுவினர், தலைநகர் தோகாவில் ஷுரா கவுன்சில் உறுப்பினர்களை சந்தித்தனர்.