சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதனால், ஏற்படும் நன்மைகள் குறித்து நாடு முழுவதும் பாஜக சார்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை திருவான்மியூரில் தமிழக பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, ஒரே நேரத்தில தேர்தல் நடத்துவதால், ஏற்படும் நன்மைகள் மற்றும் பலன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.