பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 60 கோடி ஏழை மக்களுக்கு, தலா 5 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் ஸ்வஸ்தி நிவாஸ் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமித்ஷா, இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறினார்.