ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்ததாகக் காங்கிரஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நேர்மையற்றது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக டெல்லியில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் பரப்பும் போலி செய்திகளை அகற்றுவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்பே தகவல் அளித்ததாகக் காங்கிரஸ் பழி சுமத்துவது நேர்மையற்றது எனக் கூறிய அவர், ஆப்ரேஷன் சிந்தூர் நடத்தப்பட்ட பின்னரே பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.