கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் இந்தியாவிலும் தென்மேற்கு பருவமழை முழுமையாகத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், தேனி, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், விடப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு தமிழக கடற்கரையில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், பலத்த காற்று காரணமாகத் தூத்துக்குடி, பாம்பன் துறைமுகங்களில் 3ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.