ரோஜாவுக்கு அடுத்தபடியாக ஓசூர் பாகற்காய்க்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்து விவசாயிகள் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
நான்கு ஏக்கர் பரப்பளவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 2 டன் பாகற்காய் மகசூல் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தென்னை மரத்தின் நடுவே ஊடுபயிராகப் பாகற்காய் சாகுபடி செய்வதால், நிலத்தின் முழு பயனும் கிடைத்து வருவதாகவும், இரட்டைப்பயிர் முறை கூடுதல் வருமானத்தை ஈட்டி தருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அதிக விளைச்சல் கண்டுள்ள பாகற்காய் தற்போது சந்தைப்படுத்தலில் ரோஜாவிற்கு அடுத்தபடியாக பெயர் பெற்று வருவதாகவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஓசூர் பாகற்காயிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.