நீலகிரி அருகே திமுக மற்றும் காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெள்ளியாலம் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, திமுக, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக கட்சியைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.