கண்ணப்பா படத்தின் கதையைக் கேட்காமலேயே அதில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், ரோஜா, அழகன் ஆகிய படங்களில் நடித்த கால கட்டத்தில் யாருடன் இணைந்து நடிக்கிறோம் என்பது பற்றி தனக்குத் தெரியாதெனக் கூறினார்.
மோகன்லாலுடன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக மதுபாலா தெரிவித்தார்.