அருணாசலப்பிரதேசத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள பல்வேறு இடங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அப்பர் சுபன்சிரி மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், தாழ்வான பகுதிகள் மூழ்கின. இதனால், மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
இதற்கிடையே, பனா-செப் பகுதியில் பலத்த மழையின்போது சென்ற கார் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.