72-வது உலக அழகியாகத் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசதா மகுடம் சூடினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இதில் 109 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு, தனித்திறமை, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இறுதிச்சுற்று ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசதா வெற்றி பெற்று 2025-ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.
அவருக்குக் கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூட்டினார்.