பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் வரும் 4-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடையவுள்ளது.
இதனையொட்டி வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களின் துறை சார்ந்த திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவரங்களைத் தயாராக எடுத்து வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துறை ரீதியான விரிவான ஆலோசனையைப் பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.