ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜெபி நட்டா தலைமையில் மூவர்ணக்கொடி பேரணி நடைபெற்றது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பாராட்டியும், இந்திய முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், பாஜக சார்பில் நாடு முழுவதும் மூவர்ணக்கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சோலன் பகுதியில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ணக்கொடி பேரணியில் ஜெபி நட்டா பங்கேற்றார். இந்த பேரணியில் தேசியக்கொடியை ஏந்தியபடி ஆயிரக்கணக்கான பாஜக-வினர் பங்கேற்றனர்.