குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவர்களைக் காப்பாற்றிய தொழிலாளி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் தடுப்பணை வழியாக நடந்து சென்ற இரு மாணவர்கள், ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்த தொழிலாளி பீட்டர் என்பவர், ஆற்றில் குதித்து அவர்களைக் காப்பாற்றினார்.
ஆனால் துரதிருஷ்டவசமாகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவரை, 24 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் சடலமாகத் தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.
உயிரிழந்த பீட்டரின் 2 பிள்ளைகள் மற்றும் அவரது மனைவிக்கு உரிய நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டுமென விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கட்பட்டிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி எடுப்பதாகத் தாரகை கட்பட் உறுதியளித்தார்.