ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர் கல்வித்துறை நிர்வாக சீர்கேட்டினாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருக்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்காதது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பேராசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க இயலாத அலங்கோல ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர் கல்வித்துறை நிர்வாக சீர்கேட்டினாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருக்குலைந்துள்ளது என விமர்சித்துள்ள அவர்,
அறிவை அள்ளி வழங்கும் ஆசிரிய பெருமக்களின் எரியும் வயிறு இந்த ஆட்சியாளர்களைச் சுட்டெரிக்காமல் விடாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வல்லுநர் குழுவை அமைத்து உயர்கல்வி மற்றும் நிதி மேலாண்மையை மேம்படுத்த வேண்டுமென்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.