பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 48 மணி நேரத்தில் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்பதே பாகிஸ்தானின் லட்சியமாக இருந்ததாக கூறினார்.
ஆனால் பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, வெறும் 8 மணி நேரத்தில் இந்தியா ராணுவம் முறியடித்ததாக அவர் தெரிவித்தார். இதனால் அஞ்சிய பாகிஸ்தான் போரை நிறுத்த இந்தியாவிடம் கெஞ்சியதாக அவர் கூறினார் .
மேலும் துல்லியமான தாக்குதலால் போர் முறையில், ஆப்ரேஷன் சிந்தூர் புதிய வரலாற்றை படைத்ததாகவும் அனில் சவுகான் தெரிவித்தார்.