பெங்களூருவில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகளைத் தேடி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறியும் ஆர்சிபி நிர்வாகம் நிகழ்ச்சியை நடத்தியதே இந்த சோக சம்பவத்துக்குக் காரணம் என காவல்துறை தரப்பினர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.