கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடிகரையைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் வத்சலா தேவி, ஜெயப்பிரகாஷ்,ரேகா, பிரகாஷ்மற்றும் சரவணக்குமார் ஆகியோர் பொறியியல் பட்டதாரி கவுதம்குமார் என்பவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 13 லட்ச ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தியதில் 5 பேரும் பலரிடம் வேலை வாங்கி தருவதாகக்கூறி 64 லட்ச ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
பின்னர் ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரகாஷை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் வத்சலா தேவி உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.