சீருடையுடன் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களைப் பதிவு செய்ய வேண்டாம் எனக் காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
அலுவல் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சீருடையுடன் இருக்கும் புகைப்படங்கள் ஆகியவற்றைக் காவல் அதிகாரிகள் தனிப்பட்ட சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதாகவும் அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் பல காவல்துறை அதிகாரிகள் தனிப்பட்ட நிகழ்ச்சியில் சீருடையுடன் கலந்து கொள்வதாகவும் அப்போது பரபரப்பான அதிகாரப்பூர்வ தகவல்களைத் தெரிவிப்பதாகவும் இது தொடர்பாக காவல்துறை தலைமையகம் கவனத்திற்கு வந்துள்ளதாகவும் டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.