கோவை மாவட்டம் அன்னூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்தனர்.
அன்னூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகத்துடன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் முதியவரின் வாகனம் மீது மோதியது. இதில் வாகன ஓட்டிகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.