அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பள்ளி பதிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் மருத்துவ விவரங்கள் உட்பட பல்வேறு தனிநபர் தரவுகளையும் ஆய்வு செய்ய முடியும்.
கோடிக்கணக்கான அமெரிக்க மக்களின் தனிநபர் விவரங்களை ஆய்வு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு முன் தனியுரிமை சட்டங்களின் அடிப்படையில், சமூகப் பாதுகாப்பு தொடர்புடைய விவரங்களை ஆய்வு செய்வதற்கு மேரிலேண்ட் பெண் நீதிபதி தடை விதித்திருந்த நிலையில், அந்த தடை நீங்கியுள்ளது.