அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மனைவி காலமான நிலையில், அவரது குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேரில் ஆறுதல் தெரிவித்தனர்.
மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதியின் மகளும், அதிமுக அம்மா பேரவையின் மாநில துணைச் செயலாளருமான ஆற்றல் அசோக்குமாரின் மனைவியுமான கருணாம்பிகா உடல்நலக் குறைவால் காலமானார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் பகுதியில் உள்ள இல்லத்திற்குச் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் ஆற்றல் அசோக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.தொடர்ந்து அவர்கள் கருணாம்பிகாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.