ராஜஸ்தானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய போர்ப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
இந்த பயிற்சி இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையின் தெற்கு பகுதிக்கு அருகில் நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்த பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை இரவு 9.30 மணி வரை நடைபெறவுள்ளது.
விமான நடவடிக்கைகளைப் பாதுகாப்பாகவும், தடையின்றியும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக விமானப்படை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்திய விமானங்கள் பயிற்சியில் ஈடுபடுவதால் பாகிஸ்தான் பீதியடைந்துள்ளது.