மதுரையில் தான் திமுக-வுக்கு முடிவுரை எழுதப்படவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு அமித்ஷா வந்தாலே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிடுகிறது என தெரிவித்தார்.
கோயிலுக்கு செல்வது மதவாதம் என்றால் நாங்கள் செய்வது மதவாதம் தான் என்றும் அவர் கூறினார். மதுரையில் தான் திமுக-வுக்கு முடிவுரை எழுதப்பட உள்ளதாகவும், சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தமிழிசை கூறினார்.