தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார்.
பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆண்டிப்பட்டி- தேனி சாலையில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வேன், போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதி தேனீர் கடை வளாகத்திற்குள் புகுந்தது. இதில் ஒருவர் காயமடைந்தார்.