கோவில்பட்டியில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதிய பெட்ரோல் டேங்கர் லாரி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இந்த விபத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர், தீ பிடிக்காமல் இருக்க நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பெட்ரொல் டேங்கர் லாரி அப்புறப்படுத்தப்பட்டது. ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் விபத்து நேர்ந்ததா எனும் கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.