இஸ்ரேல் ராணுவத்திற்குப் பயப்படவில்லை; இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்தை எண்ணியே பயப்படுகிறேன் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் மேடலின் கப்பலில் சென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு அவரது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
பின்னர் ஸ்டாக்ஹோமில் உள்ள அர்லாண்டா விமான நிலையத்தை வந்தடைந்த அவருக்கு, ஆதரவாளர்கள் பாலஸ்தீன கொடிகளுடன் வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இஸ்ரேலிய ராணுவம் தங்கள் குழுவினரை அவமானப்படுத்தியதாகக் குற்றம் சாட்டினார்.