நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?
Aug 3, 2025, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Web Desk by Web Desk
Jun 13, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த பயங்கர விமான விபத்துக்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வியாழக் கிழமை, அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குக் கிளம்பியது.

கிளப்பிய வேகத்தில் அருகில் இருந்த மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து வானில் ஏறுகிறது. பிறகு குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே தாழ்வாகப் பறந்த விமானம் சில நொடிகளிலேயே அதிவேகமாக கீழே  இறங்குகிறது. மரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகிறது  ஏர் இந்தியா விமானம். அதன்பின்னர்,அதிக சத்தத்துடன் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிகிறது.   ஒரு பெரிய கருப்பு புகை மூட்டத்தை வீடியோக்கள் காட்டுகின்றன.

625 அடி உயரத்தை எட்டியபோது விமானத்திலிருந்து கடைசி சிக்னல்  கிடைத்ததாகவும், பின்னர்  நிமிடத்துக்கு 475 அடி செங்குத்து வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் விமான ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரலான வீடியோவில் விமானம் காற்றில் மிதக்கப் போராடுவதைக் காட்டுகிறது. இது விமானத்தின்  இரண்டு  எஞ்சின்களும் செயலிழந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

புறப்பட்ட உடனேயே அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு MAY DAY அபாய அழைப்பு வந்துள்ளது. அதன்பின்,ஏர் இந்தியா விமானத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்று இந்திய விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாகப் பறவை மோதுவதும் விமானம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கும். இரட்டை இயந்திர செயலிழப்புக்கான காரணம், பறவை மோதுவதுதான் என்றும் கூறப்படுகிறது.

விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ள சில விமான நிபுணர்கள், மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையிலிருந்துள்ளதை வீடியோவில் காணமுடிகிறது என்றும் விமானம் புறப்பட்ட உடனேயே இப்படி இருப்பது  அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரீம்லைனர் விமானம், ஆறு வாரங்களுக்கு முன்புதான்  ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப் பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு கறுப்புப் பெட்டியில் பதிவான தகவல்களைப் பெறக் குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அதன் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம்  தெரியவரும்.

Tags: gujaratகுஜராத்அகமதாபாத் விமான விபத்துThe plane crash that shook the country: Was the twin engine failure the cause?AI-171 போயிங் 787-8
ShareTweetSendShare
Previous Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Next Post

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies