நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?
Jan 14, 2026, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டை உலுக்கிய விமான விபத்து : இரட்டை எஞ்சின்கள் செயலிழப்பு காரணம்?

Murugesan M by Murugesan M
Jun 13, 2025, 08:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சிலமணி நொடிகளிலேயே கீழே விழுந்து நொறுங்கித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.  நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த பயங்கர விமான விபத்துக்கான காரணம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வியாழக் கிழமை, அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல்  சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம், லண்டனுக்குக் கிளம்பியது.

கிளப்பிய வேகத்தில் அருகில் இருந்த மேகனி நகரில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியின் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

AI-171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விமான நிலைய ஓடுதளத்தில் இருந்து வானில் ஏறுகிறது. பிறகு குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலே தாழ்வாகப் பறந்த விமானம் சில நொடிகளிலேயே அதிவேகமாக கீழே  இறங்குகிறது. மரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்களுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போகிறது  ஏர் இந்தியா விமானம். அதன்பின்னர்,அதிக சத்தத்துடன் விமானம் வெடித்து தீப்பிடித்து எரிகிறது.   ஒரு பெரிய கருப்பு புகை மூட்டத்தை வீடியோக்கள் காட்டுகின்றன.

625 அடி உயரத்தை எட்டியபோது விமானத்திலிருந்து கடைசி சிக்னல்  கிடைத்ததாகவும், பின்னர்  நிமிடத்துக்கு 475 அடி செங்குத்து வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியதாகவும் விமான ரேடார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைரலான வீடியோவில் விமானம் காற்றில் மிதக்கப் போராடுவதைக் காட்டுகிறது. இது விமானத்தின்  இரண்டு  எஞ்சின்களும் செயலிழந்து போயிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது.

புறப்பட்ட உடனேயே அகமதாபாத் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருக்கு MAY DAY அபாய அழைப்பு வந்துள்ளது. அதன்பின்,ஏர் இந்தியா விமானத்திலிருந்து எந்த பதிலும் இல்லை என்று இந்திய விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

வழக்கமாகப் பறவை மோதுவதும் விமானம் விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கும். இரட்டை இயந்திர செயலிழப்புக்கான காரணம், பறவை மோதுவதுதான் என்றும் கூறப்படுகிறது.

விமானம் புறப்படும்போது அதன் இறக்கை மடிப்புகள் (Airplane wing flaps) ஒரு சிக்கலான நிலையில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ள சில விமான நிபுணர்கள், மடிப்புகள் இறக்கையுடன் ஒன்றிப்போன நிலையிலிருந்துள்ளதை வீடியோவில் காணமுடிகிறது என்றும் விமானம் புறப்பட்ட உடனேயே இப்படி இருப்பது  அரிதானது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிரீம்லைனர் விமானம், ஆறு வாரங்களுக்கு முன்புதான்  ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று சாதனை படைத்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப் பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு கறுப்புப் பெட்டியில் பதிவான தகவல்களைப் பெறக் குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  அதன் பிறகே விபத்துக்கான உண்மையான காரணம்  தெரியவரும்.

Tags: gujaratகுஜராத்அகமதாபாத் விமான விபத்துThe plane crash that shook the country: Was the twin engine failure the cause?AI-171 போயிங் 787-8
ShareTweetSendShare
Previous Post

இமயமலையில் மட்டுமே வளரும் மருத்துவ காளான் – கோவையில் தயாரித்து சாதனை!

Next Post

அதிகார வெறியில் யூனுஸ் : தேர்தலை ஒத்தி வைக்க சதி – வெடிக்கும் போராட்டம்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies