திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணையை வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
கடந்த 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீரைத் திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த காவிரி நீர் திருச்சி முக்கொம்பு அணையை இன்று காலை வந்தடைந்தது.
இதனையடுத்து முக்கொம்பு காவிரி பாலத்தில் நின்றிருந்த விவசாயிகள், விதை நெல் மற்றும் மலர்களைத் தூவி காவிரி நீரை வரவேற்றனர். நடப்பாண்டு டெல்டா மாவட்டங்களில், 17.32 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.