இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
2025-26ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்றது.
பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற்ற இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
அதிலும், தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.