ஆனி மாத பூஜைக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கேரளாவில் உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்குப் பூஜைகள் மட்டுமின்றி மாதாந்திர பூஜைக்காக 5 நாட்கள் திறக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படும் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
கோயில் தந்திரி முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 19ம் தேதி வரை சிறப்புப் பூஜைகள் நடைபெறும் என்றும், அன்றைய தினம் இரவு ஹரிவராசனம் பாடி நடை சாத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு கூறியுள்ளது.